இயக்குனர் நெல்சன் திலீப் குமார், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயிலர், முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கடந்த மாதம், (ஆகஸ்ட்) 10ஆம் தேதி இப்படம் வெளியானது.
மேலும் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானதில் இருந்து, தற்போது வரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இது எந்த ஒரு திரைப்படமும் செய்திடாத மிகப்பெரிய வரலாற்று சாதனையாக பார்க்கப்படும் நிலையில், இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இயக்குனர் திலீப் குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதிமாறன் மிகப்பெரிய தொகையை செக்காக வழங்கியது மட்டுமின்றி, விலை உயர்ந்த சொகுசு காரையும் பரிசாக அளித்தார். இந்த தகவல் நேற்று வெளியாகி வைரல் ஆனது.
இதைத்தொடர்ந்து, தற்போது ரசிகர்கள் பலரும் எப்போது 'ஜெயிலர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தங்களுடைய எதிர்பார்ப்பை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், ஸ்ட்ரீம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினிகாந்தின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தலைவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Kushi Box Office: முதல் நாளே பாக்ஸ் ஆபீசில் அடித்து நொறுக்கிய 'குஷி' படத்தின் வசூல்? எவ்வளவு தெரியுமா?