கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த ஜெமினி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் கிரண். வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், இப்படத்திலும் வட மாநில பெண்ணாகவே நடித்திருந்தார். முதல் படத்திலேயே கவர்ச்சி கலந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த கிரணுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
பின்னர் சுந்தர் சி இயக்கிய பிளாக்பஸ்டர் திரைப்படமான வின்னர் படத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார் கிரண். பின்னர் கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடித்தார். இப்படி முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்தாலும், இவருக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்து வந்தன.
நடிகை கிரணுக்கு வயதானதாலும், உடல் எடை கூடியதாலும் படிப்படியாக பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஆம்பள. இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், செயலி ஒன்றை தொடங்கி, அதில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட சம்பாதிக்க ஆரம்பித்தார் கிரண்.