ஐயோ என்னை காப்பாத்துங்க! சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

First Published Apr 25, 2024, 7:19 AM IST

சென்னையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai Rowdy

சென்னை தண்டையார்பேட்டை தீடீர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் தேசிங்கு (47). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக எந்த குற்றச்சம்பங்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். 

Rowdy murder

இந்நிலையில் நேற்று மாலை திடீர் நகர் எஸ்.என். செட்டி சாலை 3-வது தெரு சந்திப்பில் தேசிங்கு நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பலை கண்டு அதிர்ச்சியடைந்த தேசிங்கு ஓட ஆரம்பித்தார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த தேசிங்கு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

Autopsy

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மீன்பிடி துறைமுகம் போலீசார் தேசிங்கு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Police investigation

முதற்கட்ட விசாரணையில் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரவுடி லோகேஷ் (27), அக்கேஷ்(26), கோபி என்கிற வெங்கடேசன்(30) ஆகிய மூன்று பேருக்கும்  தேசிங்குக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால், லோகேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தேசிங்கை படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

click me!