ஃபுல் மப்பில் மட்டையான அலெக்ஸை மட்டை செய்த வெங்கடேசன்! சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரவுடி!

First Published Apr 25, 2024, 8:22 AM IST

 அரியாங்குப்பம் சாராயக்கடையில் ரவுடியை சிமென்ட் கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Puducherry Crime News

புதுச்சேரி அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் அலெக்ஸ்(33). இவரது மனைவி அருள்செல்வி. செலிவியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

Puducherry

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல ரவுடி அஸ்வினின் கூட்டாளியான இளையராஜாவை கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை  முடிந்த பிறகு வீடு திரும்பிய இளையராஜா, தனக்கு ஏற்பட்ட வலியை ஓடைவெளி பகுதியை சேர்ந்த தனது நெருங்கிய நண்பரான வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளியான செல்வக்குமாரிடம் தினமும் கூறி வந்துள்ளார். 

இதையும் படிங்க: ஐயோ என்னை காப்பாத்துங்க! சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

Puducherry Murder

 இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது நண்பனுக்காக   அலெக்ஸ்சை போட்டு தள்ள திட்டமிட்டார். இதனை அறிந்த அலெக்சின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன் கணவரை வெளியில் செல்லாமல் பார்த்து கொண்டார். தேர்தலின் போது ஓட்டுப்பதிவிற்கு வரும் போது அவரை போட்டு தள்ள ஸ்கெட்ச் போட்டும் முடியவில்லை. இதனால், சரியான சந்தர்ப்பத்திற்காக கொலை கும்பல் காத்திருந்தது. 

Police investigation

இந்நிலையில் கடந்த 22ம் இரவு செலிவியரான அலெக்சின் மனைவி இரவு பணிக்கு செல்ல மணவெளி சாராயக் கடைக்கு சென்று அலெக்ஸ்  சாராயம் குடித்துவிட்டு வீடு வந்தார். மனைவி வைத்திருந்த வறுத்த மீனை எடுத்து கொண்டு மீண்டும் சாராய கடைக்கு சென்று தனியாக உட்கார்ந்து  சாராயத்திற்கு Sidedish ஆக மீனை சாப்பிட்டு கொண்டிருந்தார். போதை தலைக்கு ஏரியதும் சாராய கடை அருகே மட்டையானார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட வெங்கடேசன் அருகில் இருந்த சிமெண்ட் சிலாப் கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார். 

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிவிட்டு! இரண்டு ஆண்டுகளாக பூ, பொட்டுடன் வலம் வந்த மனைவி!

Police Arrest

ரத்த வெள்ளத்தில் சரிந்த அலெக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து  வெங்கடேசன் அங்கிருந்து தப்பித்தார். அங்கு குடிக்க வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அரியாங்குப்பம் போலீசார் உயிரிழந்த அலெக்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

jail

இதுகுறித்து அலெக்ஸ் மனைவி அருள்செல்வி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனையடுத்து வெங்கடேசன், இளையராஜா,செல்வக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  குற்றவாளியான வெங்கடேசன் ஏனாம் சிறைக்குள் புகுந்து  மர்டர் மணிகண்டனை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!