கோடையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாம்பழம் சாப்பிடுவது ஒரு தனி மகிழ்ச்சி என்று சொல்லலாம். காரணம் மாம்பழத்தின் சுவை அப்படி இருக்கும். சொல்லபோனால், மாம்பழங்களுக்காகவே கோடையை எதிர்நோக்கும் பலர் நம்மில் இருக்கிறார்கள்.
ஆனால் மாம்பழம் சாப்பிடுவதில் சில விஷயங்களை பின்பற்றப்படுவது மிகவும் அவசியம். குறிப்பாக மாம்பழங்களை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊறவைப்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் மாம்பழங்களை தண்ணீரில் ஊற வைப்பதன் உண்மையான காரணம் என்ன..? என்பது பலருக்கு தெரிவதில்லை. இப்படி செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்..
மாம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள், பயோஆக்டிவ் கலவைகள் மற்றும் கொழுப்பு செல்கள் நிறைந்துள்ளது. அவை உடலில் கொழுப்பு தொடர்பான மரபணுக்களை பாதிக்கின்றது. எனவே, இவற்றை தடுக்க மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்தால், இவற்றின் செறிவுகள் குறைந்து, உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பைக் கரைக்க பயனுள்ளதாக இருக்கும்.
இதனால்தான் மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கிறார்கள். மேலும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்களும் இதைச் செய்யலாம்.
சமீபகாலமாக, மாம்பழம் விரைவில் பழுக்க ரசாயனங்கள் பயன்படுத்துகின்றன. இவை பழத்தின் தோலில் குவிந்து இருக்கும். எனவே, நீங்கள் மாம்பழத்தை சரியாகக் கழுவாமல் சாப்பிட்டால், உடல்நலக் கேடு ஏற்படும். எனவே, குறைந்தது ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் அனைத்து ரசாயனங்களும் நீங்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D