Actress Radha: நடு ரோட்டில் சரமாரியாக தாக்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை ராதா! போலீசில் பரபரப்பு புகார்!

First Published Mar 21, 2024, 6:28 PM IST

தமிழில் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா. இவர் அவரின் மகனுடன் சேர்ந்து ஒருவரை சரமாரியாக நடுரோட்டில் தாக்கிய சம்பவம் குறித்து, தற்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

தமிழ் சினிமாவில், முரளி ஹீரோவாக நடித்த 'சுந்தரா ட்ராவல்ஸ்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராதா.  இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில். திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனால் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால், தற்போது தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ள இவர் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. டேவிட் ராஜ் என்பவர், நடிகை ராதா மீது கொடுத்துள்ள புகாரியில் கூறியுள்ளதாவது... மார்ச் 14ஆம் தேதி தன்னுடைய மகன் சாலிகிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ராதாவும் அவருடைய மகன் தருனும் சேர்ந்து தன்னுடைய மகனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் தன்னுடைய மகன் படுகாயம் அடைந்துள்ளார். எனவே தன்னுடைய மகனை தாக்கிய இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Suriya - Jyothika: யங் லுக்கில்.. லவ்வர்ஸ் போல் கஃபே முன் செல்ஃபி எடுத்து கொண்ட சூர்யா - ஜோதிகா! வைரல் போட்டோ!

இது குறித்து போலீசார் நடிகை ராதாவிடம் விசாரித்தபோது, தான் தாக்கியதாக கூறப்படும் பிரான்சிஸ் ரிச்சர்ட்... தன்னை கிண்டல் செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட பின் இந்த விஷயம் கைகளைப்பாக மாறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே டேவிட் ரிச்சர்டுக்கும் - ராதாவுக்கும் இடையே  முன்பகை இருந்து வந்ததும், இதன் காரணமாக ராதாவின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிச்சர்டின் உறவினர் உடைத்து சேத படுத்திய விஷயமும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த புகார் மீது நடிகை ராதாவிடம் மட்டும் இன்றி, ரிச்சர்டிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு நடந்த வளைகாப்பு! ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள்!

click me!