Dindigul News
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (54). காஜா கடை உரிமையாளர். இவருக்கு கார்த்திகாமணி (48), செல்வி (35) என்று 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவதாக முதல் மனைவியே கார்த்திகாமணி பார்த்து தன் கணவர் சரவணனுக்கு செல்வியை மணம் முடித்து வைத்துள்ளார். சரவணனுக்கும் செல்விக்கும் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவியை அவுட்டர் பகுதியில் குடிவைத்தும் , 2வது மனைவி செல்வியை பெரிய கடை வீதி அருகே சுங்கச்சாவடி தெருவில் காஜா பட்டன் தைக்கும் கடை வைத்துக் கொடுத்து அந்த வீட்டிலேயே குடி வைத்திருந்தார்.
Dindigul Crime News
இந்நிலையில் நேற்று மதியம் முதல் மனைவி கார்த்திகா மணியிடம் வருவதாக கூறிவிட்டு 2வது மனைவி செல்வி வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. கணவர் சாப்பிட வீட்டுக்கு வரவில்லை என்றவுடன் முதல் மனைவி போனில் தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே நேராக சுங்கச்சாவடி வீட்டுக்கு கணவனை பார்க்க வந்த போது வீடு பூட்டி இருந்துள்ளது.
Dindigul Murder
உடன் அக்கம் பக்கத்தினரிடம் கூறி வீட்டை திறந்து பார்த்த போது அங்கு சரவணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
illegal love
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சரவணன் 2வது மனைவி செல்வி சுங்கச்சாவடி வீட்டில் இல்லாதை அறிந்த போலீசார் செல்வியை நத்தத்தில் உள்ள அவர் பெற்றோர் வீட்டில் இருந்தவரை பிடித்து வந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வீட்டின் அருகே டீக்கடை நடத்தி வரும் சலீம் என்பவருக்கும் செல்விக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் சலீமும் செல்வியும் சேர்ந்து சரவணனை கொலை செய்ததாக கூறப்பட்டது.
police investigation
இதையடுத்து செல்வி மற்றும் சலீமை பிடித்து நத்தம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட போது பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சரவணன் தனது மனைவிக்கு காஜா கடை வைத்துக் கொடுத்துள்ளார். அக்கடையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடையின் அருகே டீக்கடை வைத்துள்ள சலீம் தினந்தோறும் டீ கொண்டு வந்து கொடுப்பது வழக்கம்.
women arrest
உடன் அக்கம் பக்கத்தினரிடம் கூறி வீட்டை திறந்து பார்த்த போது அங்கு சரவணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் கொலை செய்யப்பட்ட சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.