'லால் சலாம்' படத்தின் 21 நாள் ஃபுட்டேஜ் மிஸ்ஸிங்.! பகீர் கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! காரணம் யார்?

First Published Mar 12, 2024, 5:08 PM IST

'லால் சலாம்' படத்தின் 21 நாள் படப்பிடிப்பு காட்சிகளின் ஃபுட்டேஜ் காணாமல் போய்விட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Lal salaam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி வெளியான திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்கிற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
 

மேலும் லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தன்யா பாலகிருஷ்ணன், ஆதித்யா மேனன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரியல் கிரிக்கெட் ஸ்டாரான கப்பில் தேவ், கிரிக்கெட் கோச்சாக கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இளமை திரும்புதே.. புரியாத புதிராச்சே! 69 வயதிலும்... யங் லுக்கில் உலக நாயகன் கமல்! வைரலாகும் போட்டோஸ்!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை, லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க, ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 80 முதல் 90 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம், 36 கோடி மட்டுமே வசூல் செய்தது.

Lal Salaam

மேலும் இப்படத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பலருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 'லால் சலாம்' தோல்விக்குப் பிறகு, youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம், தொகுப்பாளர் லால் சலாம் படத்தின் ஃபுட்டேஜ் மிஸ் ஆகிவிட்டதாக கூறப்பட்டதே அது உண்மையா என கேள்வி எழுப்பினர்.

பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜுடன் இணையும் துருவ் விக்ரம்..! ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான தூள் அப்டேட்!

இதற்க்கு பதிலளித்த ஐஸ்வர்யா, "அந்த செய்தி உண்மைதான். இந்த மாதிரி எல்லாம் நடக்குமா?என நாங்களே அதிர்ச்சி அடைந்தோம். 21 நாட்கள் எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ் மிஸ் ஆகிவிட்டது. இது எங்களின் பொறுப்பில்லாத செயல் என்று தான் கூற வேண்டும்.
 

நாளும் படப்பிடிப்பில் ஆயிரம் - இரண்டாயிரம் பேர் கலந்து கொள்வார்கள். கிரிக்கெட் மேட்சை 10 கேமராக்கள் வைத்து ஷூட் செய்தோம். இந்த ஃபுட்டேஜ் தான் மிஸ் ஆகிவிட்டது. படபிடிப்பு முடித்து எல்லாருமே வேறு கெட்டப்புக்கு மாறிவிட்டார்கள். பட்ஜெட்டும் மிகவும் பெரிதாக இருந்தது. எனினும் சிலவற்றை மீண்டும் ரீசூட் செய்து எடுத்தோம். ஆனால் முதல் முறை எடுத்தது போல் முழுமையாக இரண்டாவது முறை எங்களால் ஷூட் செய்ய முடியாமல் போனது. இது எங்களுக்கு மிகப்பெரிய டிராப் என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த ஸ்டேட்மென்ட் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்துக்கு கண்ணிலும் கோளாறு! ஒரு நாளைக்கு ஒருகை மாத்திரை! வெள்ளை முடி சீக்ரெட்.. பகீர் கிளப்பிய பயில்வான்!
 

click me!