ஹீரோயினா நடிக்க கூட இவ்வளவு கேட்கல... அக்காவாக நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்ட நயன்தாரா - ஆடிப்போன படக்குழு

First Published May 10, 2024, 8:38 AM IST

டாக்ஸிக் படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு அக்காவாக நடிக்க நடிகை நயன்தாரா மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

nayanthara

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் நயன்தாரா, தற்போது கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை கலக்கி வருகிறார். கடந்தாண்டு அவர் இந்தியில் அறிமுகமான ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா, நடிப்பில் தமிழில் மண்ணாங்கட்டி திரைப்படம் உருவாகி இருக்கிறது. 

Lady superstar nayanthara

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை டியூடு விக்கி இயக்கி இருக்கிறார். இப்படத்தில் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மண்ணாங்கட்டி படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து டியர் ஸ்டூடண்ட்ஸ் என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதையும் படியுங்கள்... டாப் 10 TRP-யில் இடம்பிடித்த புது சீரியல்! டல் அடித்த விஜய் டிவி சீரியல் ரேட்டிங்.. டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்!

nayanthara and yash

இதுதவிர நடிகை நயன்தாரா கைவசம் மேலும் ஒரு பிரம்மாண்ட படம் உள்ளது. அதுதான் டாக்சிக். கே.ஜி.எப் நாயகன் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படம் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. இப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அதுவும் ஹீரோயினாக இல்லை. இப்படத்தில் நடிகர் யாஷுக்கு அக்காவாக நடிக்க உள்ளாராம் நயன்தாரா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara salary for toxic movie

இதனிடையே டாக்சிக் படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா கேட்ட சம்பளம் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. வழக்கமாக ஹீரோயினாக நடிக்க ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளமாக வாங்கும் நயன்தாரா, டாக்சிக் படத்தில் யாஷுக்கு அக்கா ரோலில் நடிப்பதற்காக ரூ.20 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம். இதன்மூலம் நடிகை நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. பான் இந்தியா படம் என்பதால் நயன் இவ்வளவு அதிக தொகையை சம்பளமாக கேட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... Raayan Story Leak: கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிய தனுஷ்..! 'ராயன்' பட கதை இதுவா? லீக்கானதால் அதிர்ச்சி!

click me!