தம்பியின் மாமியாரை மடக்கி உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலை விடாத அண்ணன்! இறுதியில் பயங்கரம்!

First Published May 10, 2024, 7:49 AM IST

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தம்பியின் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த  அண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tiruvallur News

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். 

Tiruvallur Murder News

அப்போது திடீரென தம்பி தேவேந்திரன் நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் சிவகுமாரை வெட்ட முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவகுமார் உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பித்து  வயல்வெளியில் ஓடினார். ஆனாலும் விடாமல் தேவேந்திரன் தனது நண்பர்களுடன் ஓட ஒட விரட்டி சென்று சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதையும் படிங்க: டீ கொடுத்து ஆண்டியை கரெக்ட் செய்த மாஸ்டர்! உல்லாசத்திற்கு தடையாக இருந்த 54 வயது கணவரை கொலை செய்த 2வது மனைவி!

Police Arrest

ரத்த வெள்ளத்தில் சரிந்து படுகாயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது தம்பி மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அண்ணனை கொலை செய்ததாக ததம்பி காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

illegal love

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவேந்திரனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. எனது மாமியாருக்கும் அண்ணன் சிவக்குமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை பலமுறை கண்டித்தும் சிவக்குமார் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

இதையும் படிங்க:  கல்யாணம் ஆகி 26 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சந்தேகம்... 47 வயது மனைவியை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?

illegal love Murder

இதனால் ஆத்திரத்தில் அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்ததாக கூறினார்.  தேவேந்திரனை கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். தம்பியின் மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!