Tiruvallur News
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (33). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார்.
Police Arrest
ரத்த வெள்ளத்தில் சரிந்து படுகாயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது தம்பி மற்றும் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அண்ணனை கொலை செய்ததாக ததம்பி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
illegal love Murder
இதனால் ஆத்திரத்தில் அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்ததாக கூறினார். தேவேந்திரனை கைது செய்யப்பட்ட நிலையில் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். தம்பியின் மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.