தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் செலுத்தினார். இதற்காக தன்னுடைய வீட்டில் இருந்து நடந்தே வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வந்த ஸ்டாலின், வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். எனவே அனைவரும் அவர்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக மீண்டும் களமிறங்கியிருக்கும் விஜய் வசந்த், கன்யாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நடிகரும் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவருமான கமல், திமுகவுடன் கூட்டணி வைத்த நிலையில், ஒரு சீட்டு கூட கமல்ஹாசனின் கட்சிக்கு ஒதுக்கப்படாததால், இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். மேலும் சென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார் செலுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி... சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
மறைந்த தேமுதிக தலைவர், கேப்டன் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொது செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், ஷண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் சாலிகிராமத்தில் அமைந்துள்ள காவேரிப் பள்ளியில் எனது வாக்கை பதிவு செய்தனர்.