சொத்தை பிரிக்க சொன்ன ஆனந்த்... வீட்டில் இருந்து மாயமாகும் அபிராமி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published Mar 26, 2024, 4:09 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரியால் வெளியே வந்த ஆனந்த் வீட்டுக்கு வந்து சொத்தை பிடிக்க சொல்லி கேட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரியால் வெளியே வந்த ஆனந்த் வீட்டுக்கு வந்து சொத்தை பிடிக்க சொல்லி கேட்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Zee Tamil Karthigai deepam serial

அதாவது கார்த்திக் ஆனந்தை அமைதிப்படுத்த அபிராமி ஆனந்த் சொத்தை பிரிக்க சொல்லி கேட்டதால் மனம் உடைந்து போகிறார். இதனால் அவருக்கு கார்த்திக் ஆறுதல் கூறுகிறார். அதோட அபிராமி தூங்காமல் இருக்க அண்ணாமலை ஆறுதல் சொல்லி ஒரு சால்வையை போத்தி விட்டு தூங்க வைக்கிறார்.

இதையும் படியுங்கள்.. எடுத்த எல்லா படமும் ஹிட்டு... ரூ.4200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக உள்ள இயக்குனர் பற்றி தெரியுமா?

Karthigai deepam serial Update

மறுநாள் காலையில் வீடு முழுவதும் தேடியும் அபிராமியை காணாததால் எல்லாரும் பதற்றம் அடைகின்றனர். கார்த்திக் அம்மாவோட போன் வீட்ல தான் இருக்கு ஏதாவது கோவிலுக்கு போய் இருப்பாங்க என்று வீட்டில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்கிறான். மேலும் அபிராமியை தேடி கோவில் கோவிலாக அலைகிறான்.

Karthigai deepam serial Today Episode

இப்படியான நிலையில் கார்த்திக் அபிராமியை தேடி கண்டுபிடித்தானா? சொத்தை பிரிக்கும் முடிவில் இருக்கும் ஆனந்தின் திட்டம் பலித்ததா? இல்லையா? என அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்.. Ethirneechal: ஈஸ்வரிக்கு எதிராக திரும்பிய மகன்! தங்கை வாழ்க்கைக்காக ஜனனி செய்யபோது என்ன? எதிர்நீச்சல் அப்டேட்!

click me!