கார்த்திகை தீபம் சீரியல் : சாப்பாட்டுக்கு கூட வழியில்ல... தீபாவின் குடும்பத்தினரை அவமானப்படுத்தும் ராஜேஸ்வரி

First Published Mar 18, 2024, 1:15 PM IST

கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் தர்மலிங்கம் மாமா குடும்பத்தோட இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம் அதனால தான் இங்கே கூட்டி வந்ததாக சொல்லி செல்கிறான். 

Zee Tamil Karthigai deepam serial

இதைத்தொடர்ந்து மறுபக்கம் அறியா ஆனந்திடம் நாளைக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு உங்களுக்கும் எனக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் கல்யாணம் என்று சொல்கிறாள். அண்ணன் தங்கை ஏன் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்க இல்ல நாளைக்கு மீனாட்சிக்கும் எனக்கும் கல்யாண நாள் அதனால என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டா என்று சொல்ல ரியா ஆனந்தை மூளை சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறான். 

இதையும் படியுங்கள்... திருமணமான ஒரே வருடத்தில் இறந்த கணவர்..! ஏழே மாதத்தில் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி!

Karthigai deepam serial Update

மறுபக்கம் மீனாட்சி மற்றும் தீபா என இருவரும் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க அங்கு வரும் ராஜேஸ்வரி திட்டம் போட்டு தான் உங்க அப்பா அம்மாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க, ஒன்னும் இல்லாத குடும்பம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் இங்கு வந்து இருக்கீங்க என்று அவமானப்படுத்தி பேச தீபா தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்கிறாள். 

Karthigai deepam serial Today Episode

ஜானகி மற்றும் மைதிலி இதை கேட்டு வருத்தப்படுகின்றனர். மீனாட்சி சாக்கடையில் கல் எறிஞ்சா அது நம்ம மேல தான் மீண்டும் வரும் நீ வா என்று தீபாவை அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்கள்.

இதையும் படியுங்கள்... டப்பிங் யூனியன் தேர்தல்... பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் தலைவர் ஆனார் ராதா ரவி

click me!