MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமணமான ஒரே வருடத்தில் இறந்த கணவர்..! ஏழே மாதத்தில் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி!

திருமணமான ஒரே வருடத்தில் இறந்த கணவர்..! ஏழே மாதத்தில் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி!

பிரபல சீரியல் நடிகை, ஸ்ருதி சண்முக பிரியாவின் கணவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், மீண்டும் புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Mar 18 2024, 12:52 PM IST| Updated : Mar 18 2024, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சன் டிவியில் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், ஒளிபரப்பாகிய பிளாக்பஸ்டர் தொடரான 'நாதஸ்வரம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஷண்முக பிரியா. இயக்குனர் திருமுருகன் ஏற்று நடித்த கோபி கதாபாத்திரத்தில், அவரின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார் ஸ்ருதி. நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து கல்யாணப் பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற பல ஹிட் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

25

கோவையை சேர்ந்த ஸ்ருதி, சிவில் என்ஜினீயரும், ஜிம் ட்ரைனருமான அரவிந்த் சேகர் என்பவரை கடந்த 2022-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் சேர்கள்  மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆண்களுக்கு பிடிச்சா அது காதல்.. நாங்கள் பிடிக்கலன்னு சொன்னா அது வேறயா? கொந்தளித்த பிரபல நடிகை..

35

திருமணத்துக்கு பின்னர் இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஸ்ருதியும் சீரியலில் இருந்து முழுமையாக விலகி தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்தார்.

45

மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஸ்ருதியின் தலையில் இடியை இறக்கியது போல்... அமைந்தது இவருடைய கணவர் அரவிந்த் சேகரின் எதிர்பாராத மரணம். ஃபிட்னஸ் மீது அதிக அக்கறை கொண்ட கொண்ட அரவிந்த் சேகர், மாரடைப்பால் உயிரிழந்த பின்னர், அவ்வப்போது தன்னுடைய கணவரின் நினைவாக சில பதிவுகளை போட்டு வந்த ஸ்ருதி ஷண்முக பிரியா... கணவர் தன்னுடன் தான் இருக்கிறார் என கூறி வந்தார். மேலும் கணவரின் மரணத்தில் இருந்து வெளியே வர பல்வேறு இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

Goundamani : ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக 8 மணி நேரம் டப்பிங் பேசி அசர வைத்த கவுண்டமணி

55

இந்நிலையில் கணவர் இறந்த ஏழே மாதத்தில், மீண்டும்... சீரியலில் நடிக்க வந்துள்ளார். அதாவது சன் டிவியில் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி நடிப்பில் ஒளிபரப்பாக உள்ள, 'லட்சுமி' சீரியலில் ஸ்ருதியின் தோழி கேரக்டரில், ஸ்ருதி ஷண்முக பிரியா நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved