12ம் வகுப்பு படிக்கும் போதே சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியாமணி. அதுவும் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக பாலு மகேந்திரா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக அது ஒரு கனா காலம் படத்தில் நடித்தார்.
முதல் 2 படங்களிலேயே தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான் இயக்குனர்களிடம் பணியாற்றிய பிரியாமணிக்கு தமிழில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பருத்திவீரன் தான். அமீர் இயக்கிய இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகை பிரியாமணிக்கு கடந்த 2017-ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்கிற தொழிலதிபருடன் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் பிரியாமணி, படிப்படியாக பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அங்கு இவர் நடித்த பேமிலி மேன் வெப் தொடர் மாபெரும் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்தில் நடித்தார் பிரியாமணி. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆர்டிக்கிள் 370, மைதான் போன்ற பிரம்மாண்ட இந்தி படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார் பிரியாமணி.