என்னுடன் பழகாத நீ வேறு யாருடனும் இனி பழகக்கூடாது! செத்து போ! கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலன்!

First Published Apr 26, 2024, 4:11 PM IST

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த அரசு பேருந்து நடத்துனர் பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

krishnagiri Crime News

கிருஷ்ணகிரி லைன் கொள்ளையை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி லட்சுமி (40). இவர் நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

illegal love

தொடர்ந்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. லட்சுமிக்கும், கிருஷ்ணகிரி பாத்திமா நகரை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் (45) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.  மாதவனுக்கு பர பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து லட்சுமிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: தலைக்கேறிய கஞ்சா போதை! ரோட்ல போறவங்க வரவங்களை வெட்டிய இளைஞர்கள்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

Police Arrest

இதனிடையே நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற லட்சுமியை பின்தொடர்ந்து சென்ற மாதவன் என்னுடன் பழகாத நீ வேறு யாருடனும் இனி பழக கூடாது. இத்தோடு செத்து போ என்று கூறி அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாதவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த தீக்காயங்களுடன் லட்சுமிக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

click me!