BIG BANG CINEMAS என்ற பட நிறுவனம் தயாரிப்பில் தா, வில் அம்பு, போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் தயாரித்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முன்னாள் அமைச்சர் S. P. வேலுமணி துவங்கி வைத்துள்ளார்.
பீச்சாங்கை, கஜினிகாந்த், டிராபிக் ராமசாமி போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பால முரளி பாலு இசையமைக்கிறார். கேகே ஒளிப்பதிவு செய்ய, வழக்கு எண், தனி ஒருவன் போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.
ஏ.வி.எம் அரங்கில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. வித்தியாசமான திரைக்கதையின் மூலம் சிறந்த படைப்புகளைத் தந்த இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்,இந்த படத்தையும் புதுமையான களத்தில் பரபரப்பான, சைக்கலாஜிகல் திரில்லராக உருவாக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D