சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், தன்னுடைய கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கிய திரைப்படம் 3. தனுஷுக்கு ஜோடியாக உலக நாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க, முக்கிய வேடத்தில், சிவகார்த்திகேயன், ரோகிணி, சுனிதா, பானுபிரியா, பிரபு, கேப்ரியல்லா போன்ற பலர் நடித்திருந்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை, இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத... சைக்கலாஜிக்கல் திரில்லர் பாணியில் இயக்கி இருந்தார். பயோ போலார் டிஸாடர் பிரச்சனையால் பாதிக்கப்படும் தனுஷ், இல்லாத உருவங்களை கற்பனை செய்து கொண்டு, மனைவி ஜனனியை கொலை செய்து விடுவோமோ என்கிற பயத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரை விடுகிறார். இதனை மிகவும் எமோஷ்னலாக கூறி இருந்தார் ஐஸ்வர்யா.
இப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகும் நிலையில், இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்தது, ஸ்ருதி ஹாசனை தானம். அப்போது தேதி பிரச்சனை காரணமாக, ஸ்ருதி ஹாசனுக்கு பதில் அமலாபாலை கமிட் செய்துள்ளனர்.