Rajinikanth : “அந்த படம் செமயா இருக்கு..” கமல் படத்தை பார்த்து பதறிய ரஜினி.. தயாரிப்பாளரிடம் போட்ட டீல்..

First Published Mar 29, 2024, 7:44 PM IST

ரஜினி ஒருமுறை கமலின் படத்தை பார்த்து பதறிப்போனார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். இவருக்கும் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினியின் படம் இப்போதும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது 71 வயதை கடந்திருந்தாலும் ரஜினி இன்று அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும்பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருக்கிறார். எனவே புதிய சாதனைகளை படைப்பதோ அல்லது ஏற்கனவே உள்ள சாதனைகளை முறியடிப்பதோ நடிகர் ரஜினிக்கும் ஒன்றும் புதிதல்ல. இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர்.

தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார். ஆனால் ரஜினி ஒருமுறை கமலின் படத்தை பார்த்து பதறிப்போனார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். 1980களில் ரஜினி கமல் படங்கள் பல முறை நேரடியாக மோதிக்கொண்டன.

Rajinikanth

அப்படி 1987-ம் ஆண்டு ரஜினியின் மனிதன் படமும், கமலின் நாயகன் படமும் ஒரே நாளில் வெளியானது. மனிதன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தனது நண்பரும், எழுத்தாளருமான பஞ்சு அருணாச்சலத்தை போன் செய்து தனது வீட்டிற்கு அழைத்தாராம் ரஜினி. அப்போது அவர் ரஜினி வீட்டிற்கு சென்ற போது “ அண்னே நாயகன் படம் பார்த்துட்டு வந்தேன். படத்தை அப்படி பண்ணிருக்காங்க. நம்ம படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுது. ஆடியன்ஸுக்கு எப்படி இருக்கும் என்று டென்ஷனாக கேட்டாராம்.

அதற்கு பஞ்சு அருணாச்சலம், “ சார். நீங்க நடிச்ச மனிதன் படம் பக்கா கமர்ஷியல். அது வேற. நாயகன் படத்தை நானும் பார்த்தேன்.. அது வேற மாதிரி.. ரெண்டுமே ஓடும் சார். அது ஒரு மாதிரி ஓடும். இது வேற மாதிரி ஓடும்” என்று ரஜினியிடம் கூறினாராம். 

அப்போது ரஜினி, “ நீங்க சொன்ன மாதிரி ரெண்டு படமும் சமமா வசூல் பண்ணுச்சுன்னா உங்களுக்கு ஒரு கால்ஷீட் தரேன் என்று கூறினாராம். நாயகன், மனிதர் இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஒரே மாதிரியான வசூலை ஈட்டியிருந்தது.

தான் கூறியது போலவே ரஜினி பஞ்சு அருணாச்சலத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்த படம் தான் குரு சிஷ்யன். மீனா பஞ்சு அருணாச்சலம் தயாரித்த இந்த படத்திற்கு, பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதினாராம். 

ரஜினி தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!