Chennai Crime News
சென்னை வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ரவுடி சரத்குமார்(28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் சரத்குமாரை வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரத்குமார் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.
Surrender
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 2019 ஆண்டு பெரவள்ளூர் பகுதியில் பூசாரி ஜானகிராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரத்குமார் முக்கிய குற்றவாளி என்பதால் முன்விரோதம் காரணமாக சரத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் ராஜமங்கலம் போலீசில் சரண் அடைந்தனர்.