சென்னையில் பயங்கரம்!பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! நேரில் பார்த்த பொதுமக்கள்! அலறியடித்து ஓட்டம்!

First Published Apr 30, 2024, 2:27 PM IST

சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஓட  ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து அங்கும் இங்கும்  பதறி அடித்து ஓடினர். 

Chennai Crime News

சென்னை வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ரவுடி சரத்குமார்(28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் சரத்குமாரை வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த  சரத்குமார் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். 

Chennai Rowdy Murder

ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்றது. பின்னர் பொதுமக்கள் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் அவரை சுற்றி வளைத்த கும்பல்  தலை, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து சர்வசாதாரணமாக தப்பியது. பட்டப்பகலில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓடியனர். 

இதையும் படிங்க: பழிக்கு பழி! தலை, கைகள் துண்டித்து இளைஞர் கொடூர கொலை! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்! வெளியான பரபரப்பு தகவல்

Police investigation

உடனே இந்த சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? பிரபல மருத்துவர் கனிகா அறிவுரை

Surrender

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த 2019 ஆண்டு பெரவள்ளூர் பகுதியில் பூசாரி ஜானகிராமன் கொலை‌ செய்யப்பட்ட வழக்கில் சரத்குமார் முக்கிய குற்றவாளி என்பதால் முன்விரோதம் காரணமாக சரத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் ராஜமங்கலம் போலீசில் சரண் அடைந்தனர். 

click me!