டைட்டில் வின்னருக்கு கூட இப்படி ஒரு மரியாதை கிடைக்கல... பிக்பாஸுக்கு பின் பிரதீப்புக்கு கிடைத்த மாஸ் வரவேற்பு

First Published Feb 6, 2024, 9:09 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு பள்ளி ஆண்டு விழாவில் மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

Pradeep Antony

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதற்கு முக்கிய காரணம் பிரதீப் ஆண்டனி. இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கண்டெண்ட் கிங்காக திகழ்ந்து வந்த பிரதீப்புக்கு வார வாரம் மக்களின் ஆதரவும் பெருகியது. பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கப்போகும் போட்டியாளராக பிரதீப் இருப்பார் என்று நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே பேச்சு எழ ஆரம்பித்தது. இதனால் உஷாரான மாயா, பூர்ணிமா ஆகியோர் பிரதீப்பை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்டனர்.

BiggBoss Pradeep Antony

பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டனர். டைட்டில் வின்னர் ஆகும் கனவோடு இருந்த பிரதீப்பை இப்படி ஒரு பொய் குற்றச்சாட்டை கூறி வெளியேற்றியது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதனால் கமல்ஹாசன் மீதும் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் புல்லி கேங் என சொல்லப்படும் மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் வெளியில் தலைகாட்டாமல் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஆமா நாங்க Bully Gang தான்... பெருமையாக பதிவிட்ட நிக்சனை பொளந்துகட்டும் நெட்டிசன்கள்

Pradeep Antony in School Function

அதேவேளையில், பிரதீப்பும் தன்னுடைய ரெட் கார்டு எவிக்‌ஷனுக்கு பின்னர் எந்த ஒரு பேட்டியும் கொடுக்காமல் அமைதி காத்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாக பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். அதில் பிரதீப்புக்கு ராஜ மரியாதை கொடுத்து மாஸான வரவேற்பும் அளித்துள்ளார். போலீஸ் உடன் பிரதீப் கெத்தாக நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pradeep Antony Viral Photos

அதுமட்டுமின்றி அவருக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவித்து உள்ளனர். பிரதீப்புக்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பை பார்த்து உற்சாகம் அடைந்த ரசிகர்கள், டைட்டில் வின்னருக்கு கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் பிரதீப் மக்களின் உண்மையான அன்பை சம்பாதித்துள்ளது இதன்மூலம் தெரிகிறது என்றும் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு வருகின்றனர். பிரதீப்பின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் தான் தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.

இதையும் படியுங்கள்... பிரதீப் வெளியேற்ற நடந்த சூழ்ச்சி.! தாழ்ப்பாள் மேட்டர்.. நான் குளிக்கும் போது? உண்மையை உடைத்த விச்சு!

click me!