பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனும் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தாலியில் நடந்த இந்த திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தீபிகா படுகோன் அறிவித்தார். .
இந்த நிலையில் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை நீக்கிவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் ரன்வீரும் தீபிகாவும் பிரியப் போவதாக தகவல் பரவ தொடங்கியது.
ஆனால் ரன்வீர் தனது திருமண புகைப்படங்களை நீக்கவில்லை என்றும், அவர் அதை ஆர்கேவ் செய்து வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
Deepika Padukone
இதுகுறித்து ரன்வீர் சிங், தீபிகா படுகோனுக்கு நெருக்கமான ஒருவர் பேசிய போது “ தீபிகாவுக்கும் ரன்வீர் சிங்கிற்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் பிரியப்போவதாக பேசுவது ஆதாரமற்றது.அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
கெரியரில் இருவரும் பிசியாக இருந்தாலும், இருவரும் நேரம் ஒதுக்கி சந்தோஷமாக இருக்கின்றனர். குழந்தையின் வரவை நினைத்து இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.” என்று தெரிவித்தார்.
கெரியரை பொறுத்தவரை ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இருவரும் தற்போது சிங்கம் 3 படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.