Bhavana: நான் உயிரோடு இருக்கும் போதே இப்படி செய்தார்கள்.. படங்கள் நடிப்பதை குறைத்து கொண்ட காரணத்தை கூறிய பாவனா

First Published May 8, 2024, 1:24 PM IST

நடிகை பாவனா, திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த நிலையில்.. அதற்கான காரணம் குறித்து முதல் முறையாக கூறியுள்ளார்.
 

மலையாள பைங்கிளியான நடிகை பாவனா, 2002-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடித்த முதல் படமே பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. மலையாளத்தில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கிய பாவனா பின்னர் தமிழிலும் அறிமுகமானார்.
 

Bhavana

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' படத்தில் எதார்த்தமான நடிப்பால் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்த பாவனா, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து... தீபாவளி, கூடல் நடிகர், ஆர்யா, வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்தார்.

Singer Mano: 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில்... முதல் முறையாக பாடிய பாடகர் மனோ!

பாவனா தமிழில் கடைசியாக 2010-ஆம் ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படம் அசல். இந்த படத்திற்கு பின்னர்... சில வாய்ப்புகளை கிடைத்த போதும் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து கன்னடம், மற்றும் மலையாளத்தில் தரமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
 

நடிகை பாவனா, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி அதில் இருந்து மீண்டார். இந்த விவகாரம் கோர்ட் - கேஸ் என பூகம்பத்தை வெடிக்க வைத்தது. இந்த சர்ச்சை ஓய்ந்த கையேடு தன்னுடைய காதலரும், திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 

Nayanthara Photos: கலக்கலான பார்ட்டி வேர் அணிந்து கடற்கரையில் காதல் கணவர் விக்கியுடன் நயன்! வைரலாகும் போட்டோஸ்
 

திருமணத்திற்கு பின்னர் நடிப்பு பணியை தொடர்ந்து வந்தாலும்.. திரைப்படங்களை குறித்து கொண்டார்.குறிப்பாக சுமார் 14 வருடம் கழித்து தான் 'தி டோர்' என்கிற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
 

திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டது ஏன் என அண்மையில் இவரிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த பாவனா, "என்னைப் பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்டன. சம்மந்தமே இல்லாமல் சிலருடன் இணைந்து பேசினார்கள். நான் உயிரோடு இருக்கும் போதே, இறந்து விட்டதாக வதந்திகளை பரப்பப்பட்டன. இதுபோன்ற சில கசப்பான அனுபவங்களே நான் திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொள்ள காரணம் என தெரிவித்துள்ளார்.

Atlee: கண்ணே பட்டுடும்.. கல்யாண மாப்பிள்ளை போல் இருக்கும் அட்லீ! வெக்க புன்னகையில் பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!

click me!