Sundar c
இயக்குனரும், நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், கிரி, வின்னர் என தொடர்ந்து காமெடி டிராக்கில் பயணித்து வந்த சுந்தர் சி, அரண்மனை படம் மூலம் பேய் படங்கள் இயக்க தொடங்கினார். அரண்மனை முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அதன் 2 மற்றும் மூன்றாம் பாகத்தையும் இயக்கி வெற்றிகண்டார் சுந்தர் சி.
Sundar C next Movie
அரண்மனை 4 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அரண்மனை 4 படத்தை தொடர்ந்து கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் அதில் கவினை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சமீபத்தில் பேச்சு அடிபட்டது. பின்னர் அது குறித்த அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், தற்போது சுந்தர் சி-யின் அடுத்த படம் குறித்த ஹாட் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.