அரண்மனையை இழுத்து மூடிவிட்டு... பாலிவுட்டுக்கு பறக்கும் சுந்தர் சி - முதல் படமே இந்த டாப் நடிகருடனா?

First Published Mar 19, 2024, 2:46 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் அதில் முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Sundar c

இயக்குனரும், நடிகை குஷ்புவின் கணவருமான சுந்தர் சி தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், கிரி, வின்னர் என தொடர்ந்து காமெடி டிராக்கில் பயணித்து வந்த சுந்தர் சி, அரண்மனை படம் மூலம் பேய் படங்கள் இயக்க தொடங்கினார். அரண்மனை முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அதன் 2 மற்றும் மூன்றாம் பாகத்தையும் இயக்கி வெற்றிகண்டார் சுந்தர் சி.

Sundar C Aranmanai 4

இதையடுத்து அவர் இயக்கிய காஃபி வித் காதல் படம் தோல்வியை சந்தித்ததால், மீண்டும் அரண்மனை பக்கம் திரும்பிய இயக்குனர் சுந்தர் சி அதன் நான்காம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவருடன் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சம்பள விஷயத்தில் இப்போ விஜய் தான் டாப்! கடைசி படத்துக்காக தளபதிக்கு வாரி வழங்கப்பட உள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Sundar C next Movie

அரண்மனை 4 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அரண்மனை 4 படத்தை தொடர்ந்து கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் அதில் கவினை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சமீபத்தில் பேச்சு அடிபட்டது. பின்னர் அது குறித்த அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. இந்த நிலையில், தற்போது சுந்தர் சி-யின் அடுத்த படம் குறித்த ஹாட் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

Akshay kumar

அதன்படி, அவர் அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்ல உள்ளாராம். அங்கு முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமாரை ஹீரோவாக வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளாராம் சுந்தர் சி. இப்படத்தில் மற்றொரு ஹீரோவாக பாபி தியோல் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் சுந்தர் சி. இதை அறிந்த நெட்டிசன்கள் ஒருவழியாக அரண்மனையை மூடிவிட்டாரப்பா என கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கடுப்பான கூல் சுரேஷ்! மன்னிப்பு கேட்ட விசித்ரா! உதாசினம் செய்த தினேஷ்.. பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நடந்த களோபரம்

click me!