3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு வலுசேர்க்கும் விதமாக மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
லால் சலாம் திரைப்படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். குறிப்பாக இந்த விழாவின் நாயகனான ஏ.ஆர்.ரகுமானும் கலந்துகொண்டு, படத்தின் பாடல்களை பாடியதோடு படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசினார்.
இதையும் படியுங்கள்... பொண்ணா இருந்தா இங்க படம் தர மாட்டாங்க... கோலிவுட்டில் உள்ள அரசியலை தோலுரித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அப்போது அவர் கூறியதாவது : “லால் சலாம் படத்தின் கதையை முதன்முதலில் நான் கேட்கும் போது எனக்கு போர் அடித்தது. பின்னர் இது விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் இசையமைக்க ஒத்துக் கொண்டேன். பின்னர் அண்மையில் படத்தை பார்க்கும் போது ஆரம்பத்தில் நான் எந்தெந்த சீன்களையெல்லாம் கிரிஞ்சாக இருப்பதாக நினைத்தேனோ, அது அப்படியே மனதை வருடும் காட்சிகளாக தோன்றின. அதற்கு காரணம் வசனங்கள். யார் வசனம் எழுதினார்கள் என ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். அவர் நான் தான் எழுதினேன், சிலவற்றில் அப்பா மாற்றங்கள் செய்தார் என சொன்னார்.