மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் - நடிகையான அபர்ணா தாஸுக்கும், தீபக் பரம்போலும்... கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், ஏப்ரல் 24-ஆம் தேதி இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான கேரள முறைப்படி நடந்து முடிந்தது.
நடிகை அபர்ணா தாஸ், ஒரு மலையாள நடிகையாக இருந்தாலும்.. தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். காரணம் இவர் ஏற்கனவே தளபதி விஜய், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்த, 'பீஸ்ட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரை போலவே இவரின் கணவர் நடிகர் தீபக் பரம்போலும் தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர் தான். அதாவது சமீபத்தில் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மலையாள படத்தில் இவரும் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியானதில் இருந்தே இருவரும் தங்களின் காதலை கடந்த 5 வருடமாக ரகசியமாக வளர்ந்து வந்த நிலையில்... அண்மையில், இவர்களின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்தது.