Anna Serial: கடத்தப்பட்ட கனி; காப்பாற்றிய ஷண்முகம்; சௌந்தரபாண்டியின் அடுத்த பிளான் என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

First Published Mar 28, 2024, 3:26 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியின் ரியல் பெற்றோர் ஷண்முகம் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து கனியை கடத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியின் ரியல் பெற்றோர் ஷண்முகம் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து கனியை கடத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கனியை கடத்தி விட்ட தகவல் சண்முகத்துக்கு தெரிய வர கார் எந்த பக்கம் போச்சு என்று விசாரிக்க கன்னியாகுமரி பக்கம் சென்றதாக சொன்னதும், ஷண்முகம் காரை மடக்கி பிடிக்க கிளம்புகிறான்.

Zee Tamil Anna serial

மறுபக்கம் காருக்குள் மீனாட்சி நீ என்னுடைய பொண்ணு, உன் பேரு கனி இல்ல தேன்மொழி என்று சொல்ல, கனி கிடையாது நான் கனி தான் என்னை இறக்கி விட்டுடுங்க என்று அடம் பிடிக்கிறாள். 

இதனையடுத்து இவர்கள் திருச்செந்தூர் ஊர் எல்லையை தாண்டும் நேரத்தில் ஷண்முகம் தன்னுடைய உறவினர்கள் மற்றும் டிராக்ட்ர் டிராக்டராக ஊர் காரர்களுடன் காரை மடக்கி பிடிக்கிறான், கனியை அங்கிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்து வருகிறான், கனியை வீட்டிற்குள் அழைத்து செல்ல சொல்ல ரத்னாவும் அவளை உள்ளே கூட்டி செல்கிறாள். 

இதையும் படியுங்கள்... Rajini : வேட்டையன் & தலைவர் 171 அப்டேட்ஸ் ரெடி... ஏப்ரல் மாதம் ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்

Anna serial Update

மீனாட்சி அவ என் பொண்ணு தேன்மொழி. 13 வருஷமா அவளை தொலைத்து விட்டு தேடிட்டு இருக்கோம், அவளை எங்ககிட்ட கொடுத்துடுங்க என்று சொல்ல, ஷண்முகம் அவ என் தங்கச்சி கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறான். இருந்தாலும் அந்த அம்மா சொன்னதை எல்லாம் நினைத்து கலங்கி போய் இருக்க, பரணி சண்முகத்துக்கு ஆறுதல் சொல்கிறாள். இருந்தாலும் அந்த அம்மா சொல்றதெல்லாம் உண்மையா இருக்குமோ என்று சொன்னதும், ஷண்முகம் அப்படியல்லாம் சொல்லாத, அப்படி இருக்க கூடாது என கோபப்படுகிறான். 

Anna serial Today Episode

ஸ்டேஷனுக்கு வரும் மீனாட்சி, அவ என் பொண்ணு தான், என் பொண்ணு இல்லாமல் இந்த ஊரை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்க சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் பத்திரக்கடைக்காரர் கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்க சொல்வதோடு, இதுல நாம தலையிட்டு இருக்க விஷயம் வெளியே தெரிய கூடாது எனவும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Kishen Das : ‘முதல் நீ முடிவும் நீ’ பட ஹீரோவுக்கு நிச்சயதார்த்தம்.. தோழியை காதலித்து கரம்பிடிக்கும் கிஷன் தாஸ்

click me!