Anna Serial : ரவுடிகளால் களவாடப்படும் உண்டியல்... திருட்டுப்பழியில் சிக்கினாரா ஷண்முகம்? அண்ணா சீரியல் அப்டேட்

First Published May 7, 2024, 3:55 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் உண்டியலை ஆட்டி பாத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் உண்டியலை ஆட்டி பாத்து பாதி உண்டியல் கூட வரல, ஸ்கூல் வாங்க முடியாதுனு சொன்னதும் ஷண்முகம் அப்பாவை அடிக்க ஓட, அவர் எஸ்கேப் ஆன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Zee Tamil Anna Serial

அதாவது சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் நாளைக்கு லீவ் போடு, ஸ்கூலை வாங்க கையெழுத்து போடணும் என்று சொல்ல, சிவபாலன் நானும் கையெழுத்து போடணுமா என்று கேட்க, இசக்கி என் அண்ணன் தான் ஸ்கூலை வாங்க போகுது என்று சவால் விடுகிறாள், ஒருவேளை நீங்க வாங்கிட்டா நானே ஆரத்தி எடுத்து வரவேற்கிறேன் என்றும் சொல்கிறாள். 

இதையும் படியுங்கள்... கார்த்திக் பேச்சை கேட்காமல் செம்ம நோஸ்கட் வாங்கிய ரம்யா - கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம ட்விஸ்ட்

Anna Serial Update

இதனையடுத்து சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டில் இருக்கும் உண்டியலை திருடி ஜனங்க பணத்தை ஆட்டைய போட்டுட்டான்னு பழியை போட்டுடலாம் என்று சொல்ல, முத்துப்பாண்டி செம ஐடியா என்று ரவுடிகள் 5 பேரை ஏற்பாடு செய்கிறான், இங்கே ஷண்முகத்திடம் இருந்து தப்பிய வைகுண்டம் வீட்டுக்கு வெளியே படுத்து கொண்டு பாட்டு பாடி ஊரை கூட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அவரை திட்டி விட்டு செல்கின்றனர். வைகுண்டம் என் கால்ல விழுந்து கூப்பிட்டா தான் வீட்டுக்குள்ள வருவேன் என டைலாக் பேச, ஷண்முகம் அப்படினா நீ வரவே வேணாம் என்று பன் செய்து கதவை சாற்றி விடுகிறான். 

Anna Serial Today Episode

அடுத்து முத்துபாண்டி அனுப்பிய ரவுடிகள் வீட்டிற்குள் புகுந்து உண்டியலை தூக்கி வர, வைகுண்டம் தூங்கி கொண்டிருக்கும் போது கனவில் யாரோ உன் ஐஸ்வர்யம் உன்னை விட்டு போகுது என்று சொன்னதும் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ள, உண்டியலை தூக்கி செல்வதை பார்த்து சத்தம் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Kanakalatha Death : பார்கின்சன் நோயால் படாதபாடு பட்ட சுந்தர் சி பட நடிகை... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

click me!