Anna Serial : மகளை தேடி கண்ணீருடன் வரும் பெற்றோர்... கனியை அனுப்பி வைத்தாரா சண்முகம்? - அண்ணா சீரியல் அப்டேட்

First Published Mar 25, 2024, 4:01 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியின் குடும்பத்தை சந்தித்து சௌந்தரபாண்டி உண்மையை உடைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கன்னியாகுமரியில் கனியின் குடும்பத்தை சந்தித்து சௌந்தரபாண்டி உண்மையை உடைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கனி இருக்கும் இடம் அறிந்து அவளது அம்மா மீனாட்சியும் அப்பா ராஜவேலுவும் மிகுந்த சந்தோஷமடைகின்றனர். எல்லோரும் கனி எப்படி இருக்கா என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருக்க, மீனாட்சி மட்டும் கனியை நினைத்து பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். அவளை சமாதானம் செய்து கனியை பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவெடுக்கின்றனர். 

Zee Tamil Anna serial

மறுபக்கம் சண்முகம் தூக்கம் வராமல் மரத்தடியில் நின்று கொண்டிருக்க பரணி தூங்கலையா என்று கேட்க, கனி என்ன விட்டு பிரிஞ்சிடுவாளோ என பயமா இருக்கு என்று வருத்தப்படுகிறான். உன்னுடைய பாசம் அவளை பிரிய விடாது. இந்த உலகமே எதிர்த்து வந்தாலும் அவ உனக்காக நிப்பா என்று ஆறுதல் சொல்லி சண்முகத்தை தூங்க சொல்ல, அவனும் தூங்கப்போகிறான். மறுநாள் காலையில் பரணி வாசலுக்கு தண்ணீர் தெளிக்க வர சண்முகம் திண்ணையில் சாய்ந்தபடி படுத்திருக்க, இரவெல்லாம் தூங்காமல் இருந்திருக்கிறான் என்பதை தெரிய வருகிறது. 

இதையும் படியுங்கள்... ஆனந்தை அலேக்காக தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்... கார்த்திகை தீபம் சீரியலில் காத்திருக்கும் அடுத்த டுவிஸ்ட்..!

Anna serial Update

பரணி அவன் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப, சண்முகம் கோபப்பட, வைகுண்டமும் ரத்னாவும் வெளியே வருகின்றனர். கனிக்கு செய்ய வேண்டியத செஞ்சுடலாம் என்று சண்முகம் சொல்கிறான். பிறகு வைகுண்டம் பாக்கியத்துக்கு சொல்லிடுங்க, அவ வரட்டும் என சொல்ல சண்முகம் அவங்க எல்லாம் வர வேண்டாம் என்று சொல்ல, வைகுண்டம் அவ என் தங்கச்சி, அவளை வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா? எந்த ஒரு நல்ல விஷயம் இருந்தாலும் அவ தான் உன்னை நின்னு நடத்துவா, ரத்னா நீ வர சொல்லு என சொல்ல சண்முகம் மனமில்லாமல் அமைதியாக இருக்கிறான். 

Anna serial Today Episode

கன்னியாகுமரியில் எல்லோரும் ஸ்டேஷனில் இருக்க, கனியின் உண்மையான அப்பா அவ எங்க பொண்ணு தானே உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க, உங்க பொண்ணு காணாம போன அதே தினத்தில் தான் அங்க அந்த பொண்ணு கிடைச்சிருக்கு என்று சொல்கிறார். சரி நீங்க எங்களுக்கு உதவி பண்ண வந்தீங்க, உங்களுக்கும் என் பொண்ணு இருக்க குடும்பத்துக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்க, சவுந்தரபாண்டி ஆமாம் எனக்கும் அந்த சண்முகத்துக்கும் பகை இருக்கு என்பதை ஒப்புக்கொள்கிறார். கனியின் அப்பா உங்களுக்குள்ள பகை இருந்தாலும் இங்கே எங்களுக்கு உதவுவதில் சந்தோஷம் என்று சொல்லி எல்லோரும் திருச்செந்தூர் கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... "இணையும் இரு காமெடி கிங்ஸ்".. 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கும் இயக்குனர் - "KMK" பட First Look இதோ!

click me!