Anna serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா வாழ்க்கையை கெடுக்க நினைச்ச குரவளையை கடிச்சு ரத்தத்தை குடிச்சிடுவேன் என இசக்கி முத்துப்பாண்டியை மிரட்ட அவன் அதிர்ந்து போன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சண்முகம் ஜோசியரை சந்தித்து கனிக்கு ஜாதகம் பார்க்க இந்த பொண்ணு இந்த குடும்பத்துல பிறந்தவன் கிடையாது இவ அவளோட அப்பா அம்மாவோட சேர வேண்டிய நேரம் வந்துடுச்சு.
Zee Tamil Anna serial
உங்களுடைய கிரகம் தான் இவ்வளவு நாளா அப்பா அம்மா கிட்ட இருந்து பிரிச்சு வச்சிருந்தது. இனிமே அவங்க ஒண்ணா சேர போறாங்க என்று சொன்னது சண்முகம் சோகமாகிறான்.
இதே நேரத்தில் கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீசார் ஒருவர் முத்துப்பாண்டிக்கு போன் போட்டு நீங்க சொன்னது சரிதான் பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு பெற்றோர் தங்களுடைய மகளை காணோம்னு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க என்று சொல்ல முத்துப்பாண்டி சந்தோஷப்பட்டு வேகவேகமாக சௌந்தரபாண்டியை பார்க்க வருகிறான்.
இதையும் படியுங்கள்... Singam 4 : மீண்டும் துரைசிங்கம் ஆகப்போகிறாரா சூர்யா?... ‘சிங்கம் 4’ பற்றி இயக்குனர் ஹரி கொடுத்த அப்டேட்
Anna serial Update
சௌந்தரபாண்டியை பார்த்து விஷயத்தை சொல்ல இதை வைத்து கனியை சண்முகத்திடம் இருந்து பிரிக்க பிளான் போடுகின்றனர். உடனே கன்னியாகுமரி கிளம்பி செல்கிறான் முத்துப்பாண்டி. இதைத்தொடர்ந்து சோகமாக நடந்து வரும் சண்முகம் முருகன் கோவிலுக்கு போய் வேண்ட கோவிலுக்குள் உள்ளே வரக்கூடாது என தடுத்து நிறுத்தும் அய்யர், உன் தங்கச்சி தானே வயசுக்கு வந்திருக்கிறது ஒரு மாசத்துக்கு கோவிலுக்கு உள்ள வரக்கூடாது என கூறுகிறார். இதனால் அவன் வெளியில் இருந்து என் தங்கச்சியை என்கிட்ட இருந்து பிரிச்சுடாத என வேண்டுகிறான்.