டீச்சர் வேலை பறிபோனா என்ன.. பரணியால் ரத்னாவுக்கு அடிக்கும் ஜாக்பாட் - அண்ணா சீரியலில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

First Published Apr 24, 2024, 3:24 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவின் டீச்சர் வேலை பறிபோன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னம் வேலை போக முத்துபாண்டியும் சௌந்தரபாண்டியும் தான் காரணம் என்று அறிந்த ஷண்முகம் அரிவாளை எடுத்து கொண்டு கிளம்ப பரணி அவனை சமாதானம் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பரணியும் சண்முகமும் ஸ்கூல் ஓனரை சந்தித்து எதுக்காக ரத்னாவை வேலையை விட்டு எடுத்தீங்க என்று கேட்க, அவர் என் அப்பா ஆரம்பித்த ஸ்கூல் என்பதால் தான் இதை தொண்டாக நினைத்து இந்த ஸ்கூலை நடத்திட்டு வரேன், வேணும்னா நீங்க இந்த ஸ்கூலை எடுத்து நடத்துங்க என்று சொல்ல, பரணி சம்மதம் சொல்ல, ஷண்முகம் அதிர்ச்சி அடைகிறான். 

Zee Tamil Anna serial

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் நீ பாட்டுக்கு ஸ்கூலை எடுத்து நடத்த சம்மதம் சொல்லிட்ட என்று திட்டுகிறான், பரணி ரத்னாவோட ஆசை என்ன தெரியுமா? என்று அவளது ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் கனவு பற்றி எடுத்து சொல்கிறாள். ஒரு அண்ணன் என்றால் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறது மட்டும் வேலை இல்ல, அவங்களோட கனவையும் நிறைவேற்ற வேண்டும் என்று புரிய வைக்க, ஷண்முகம் இந்த ஸ்கூலை நாம எடுத்து நடத்துறோம் என்று சொல்லி கிளம்பி வருகிறான். 

இதையும் படியுங்கள்... Ajith Shalini : 24வது திருமணநாளை 5 ஸ்டார் ஹோட்டலில் ஜம்முனு கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி - வைரலாகும் போட்டோஸ்

Anna serial Update

முருகன் கோவிலுக்கு வரும் சண்முகத்தை பார்த்த பூசாரி என்னப்பா பூ போட்டு பார்க்கணுமா என்று கேட்க, ஷண்முகம் உங்களுக்கு எப்படி அது தெரியும் என்று கேட்க, ஏற்கனவே பரணி வந்து பூ போட்டு பார்த்துட்டாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார், ஷண்முகம் நீ எதுக்கு கோவிலுக்கு போய் பூ போட்டு பார்த்த என்று கேட்க, நீ நேரா அங்க தான் போவேன்னு எனக்கு தெரியும் என்று சொல்கிறாள். 

Anna Serial Today Episode

மேலும் எவ்வளவு செலவு ஆனாலும் ஸ்கூலை எடுத்து நடத்துறோம், ஸ்கூலுக்கு முருகன் பெயரை வைக்கிறோம் என்று சொல்கிறாள், அதன் பிறகு நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து அடேய் சௌந்தரபாண்டி நான் அந்த ஸ்கூலை எடுத்து நடத்துறேன், என் தங்கச்சியை பிரிசிபலாக்கி காட்டுறேன் என்று சவால் விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... 250 கோடி இல்ல... அதுக்கும் மேல; கூலி படத்துக்காக ரஜினிக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - அதுவும் இத்தனை கோடியா?

click me!