Aishwarya Rajinikanth
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க நடிக்க, இரண்டாவது ஹீரோவாக விக்ராந்த் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது இவருடைய விவாகரத்து விவகாரம் ஒருபுறம் பரபரப்பாக சென்று ,கொண்டிருக்க, அடுத்ததாக பிரபல மருத்துவர் ஒருவரை பற்றிய ஆவண படத்தை தயாரித்து - இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இதற்காக கோட்டையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற செவிலியர் ஷீலாவின் மாமியார், எல்சம்மா ஜோசப்பை என்பவரை பேட்டி எடுப்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேரளாவிற்கு வந்ததாக ஷீலா கூறியுள்ளார்.
இது குறித்து வெளியாகி ஷீலா கூறியுள்ள தகவலில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருவதாக எங்கள் யாரிடமும் கூறவில்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ் இங்கு வருவதாக அறிவித்தார். ஆனால் அவர் யாருடன் வருகிறார் என்பது பற்றி எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகவும் சர்பிரைஸாக எங்கள் வீட்டிற்கு வந்தது, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மிகவும் எதார்த்தமாகவும், எளிமையாகவும், அனைவரிடமும் பழகினார் என தெரிவித்துள்ளார்.
குடும்பத்தை கழட்டி விட்டுட்டு... கோடைக்கு இதமாக ஏற்காடு சென்று கும்மாளம் போடும் 5 ஹீரோக்கள்! வைரல் போட்டோஸ்!
எல்சம்மா கோட்டையும் மருத்துவக் கல்லூரியில், 24 ஆண்டுகள் செவிலியராக பணிபுரிந்தவர். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சிபி மேத்யூவுடன் பணியாற்றி உள்ளார். ஐஸ்வர்யா ரியல் ஹீரோவாக பார்க்கப்படும் மேத்தியூவை பற்றி தான் ஒரு ஆவணப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்காக மேத்யூவுடன் பணியாற்றிய எல்சம்மாவை பிரத்தியேகமாக பேட்டி கண்டுள்ளார்.