துருவங்கள் பதினாறு படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அப்படத்திற்கு பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்ததன் மூலம் இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனார் யாஷிகா. இதையடுத்து பிக்பாஸில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அந்த விபத்துக்கு பின்னர் சுமார் 6 மாதங்கள் படுத்த படுக்கையாகவே இருந்த யாஷிகா, பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர்பிழைத்தார். இதையடுத்து படிப்படியாக சினிமாவில் நடிக்க தொடங்கிய யாஷிகா, சமூக வலைதளங்களிலும் விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பீச்சில் பிங் நிற பிகினி உடையில் நடிகை யாஷிகா ஆனந்த், விதவிதமாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.