Yashika : பிகினி பேபியாக மாறி... பீச்சோரம் சிங்கிளாக சில் பண்ணும் நடிகை யாஷிகா ஆனந்த் - வைரலாகும் போட்டோஸ்

First Published Apr 16, 2024, 9:34 AM IST

நடிகை யாஷிகா ஆனந்த், கடற்கரையில் பிகினி உடையணிந்தபடி ஹாயாக காத்துவாங்கும் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

துருவங்கள் பதினாறு படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அப்படத்திற்கு பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்ததன் மூலம் இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனார் யாஷிகா. இதையடுத்து பிக்பாஸில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இதனால் பிசியாக நடித்து வந்த யாஷிகா கடந்த 2021ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் யாஷிகா படுகாயங்களுடன் உயிர்தப்பினாலும் அவருடன் பயணித்த அவரது தோழி பாவ்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்... Vishal : என் படம் எப்ப ரிலீஸ் ஆகனும்னு முடிவு பண்றதுக்கு நீ யாரு? ரெட் ஜெயண்ட்ஸை பொளந்துகட்டிய நடிகர் விஷால்

அந்த விபத்துக்கு பின்னர் சுமார் 6 மாதங்கள் படுத்த படுக்கையாகவே இருந்த யாஷிகா, பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர்பிழைத்தார். இதையடுத்து படிப்படியாக சினிமாவில் நடிக்க தொடங்கிய யாஷிகா, சமூக வலைதளங்களிலும் விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பீச்சில் பிங் நிற பிகினி உடையில் நடிகை யாஷிகா ஆனந்த், விதவிதமாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.

யாஷிகாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். அரபிக் கடலோர அழகி என்றும் தொடையழகி என்றும் கமெண்ட்டுகளில் வர்ணித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... மீண்டும் Thug Life படத்தில் இணைந்த JR & DQ.. தேர்தலால் தலைவலியுடன் சுற்றும் மணிரத்னம் - என்ன தான் நடக்குது?

click me!