sreenidhi
சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றனர். அதனால், சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது இணையத்தில் செம்ம வைரலாக மாறிவிடும். இதனால், தன்னை பிரபலம் படுத்தும் போது, ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கி விடுகின்றனர்.
sreenidhi
அந்த வகையில், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து, யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தும் பல பதிவுகளை போட்டு வருகிறார். வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் இவரை சமூக வலைத்தள பக்கங்களில் கண்டமேனிக்கு திட்டி தீர்த்தனர்.
sreenidhi
இந்நிலையில் ஸ்ரீநிதி அண்மையில், சிம்புவை காதலிப்பதாக கூறியது, அதன் பின் சிம்பு வீட்டின் முன்பே சென்று போராட்டம் நடத்தியது என அவர் பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றார். அதனை தொடர்ந்து, அவரது அம்மா அளித்த பேட்டியில், ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
sreenidhi
இந்நிலையில் சமீபத்தில் பிரபல சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ரீநிதி, ''ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என சொல்லி தன்னை ஆபிசுக்கு அழைத்தார்கள். ஆனால், அது பார்ப்பதற்கு வீடு போல இருந்தது. நான் தயக்கத்துடன் உள்ளே சென்றேன்.உள்ளே சென்று பார்த்த போது, ஆபிஸ் செட்டப்பில் வைத்திருந்தார்கள். அப்போது, அந்தசேனல் ஹெட் என்னை அவர் மடியில் உட்கார சொல்லி, என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். ஷாக் ஆன நான், கீழே நண்பர்கள் இருப்பதாக சொல்லி அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். ஒரு கணம் தலையே சுற்றிவிட்டது. நல்லவேளை நான் தப்பித்து கொண்டேன். இருப்பினும், அவரின் பெயரை சொல்ல நான் விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....Nayanthara: யம்மாடியோவ்..நயன்தாரா-விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? பெருமூச்சு விடும் நெட்டிசன்கள்