விஜய் டிவி தொலைக்காட்சியில், 2018 ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பான சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. நான்கு அண்ணன் - தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், வெற்றிகரமாக 5 வருடங்கள் ஓடியது. இந்த தொடர் TRP-யில் டல்லடிக்க துவங்கியதும், சீரியலை முடிக்க திட்டமிட்ட சீரியல் குழு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகத்தை அதிரடியாக அறிவித்தது.
சிறுவயதில் இருந்தே அப்பா கிழித்த கோட்டை தாண்டாமல் வளர்க்கப்படும் பிள்ளைகள்... தங்களின் வாழ்க்கை என வரும் போது, அப்பா பேச்சை மீறி முடிவு செய்கின்றனர். குறிப்பாக கதிரின் திருமணம்... ராஜி ஊர்வாயில் சிக்க கூடாது என்று, கோமதி சுயநலமாக யோசித்து முடிவு செய்கிறார். தற்போது வரை ராஜு மற்றும் கதிருக்கு ஒத்து வரவில்லை என்றாலும், இதற்கு மேல் இருவருக்கும் இடையே நிறைவு ரொமான்டிக் சீன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாண்டியனின் மூத்த பையனான.. சரவணனுக்கு ஜோடியாக நடிகை சரண்யா துரடி நடிக்க உள்ளார். இவர் கடைசியாக... விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணத்திற்கு பின்னர் மீண்டும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சரண்யாவின் ரீ-என்ட்ரிக்கு பல ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.