Sai pallavi
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நடிகை சாய் பல்லவிக்கு, முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
Sai pallavi
இதனால், அம்மணிக்கு மவுசு கூடி போக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதன்பின் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம் தமிழிலும் கால்பதித்தார்.
Sai pallavi
இதனை தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இருப்பினும், சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
Sai pallavi
பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்தவர் சாய் பல்லவி.
Sai pallavi
இவரது, நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்காராய் படம் வெளியாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது பல்வேறு பாசிட்டிவ் விமர்சனங்களும் வந்து சேர்ந்தது.
Sai pallavi
தற்போது நடிகை சாய் பல்லவி நடிப்பில் விராட படம் ரிலீசாக தயாராக உள்ளது. ராணா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Sai pallavi
மேலும் தற்போது தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி ஓரிரு படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு படங்களில் வாய்ப்புகள் வந்தும் அதனை தட்டி கழித்து விட்டாராம்.
Sai pallavi
இதுகுறித்து சாய் பல்லவியிடம் கேட்டபோது, தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இமேஜ் இருந்து வருகிறது. சாய்பல்லவி எப்போதும் நல்ல கதாபாத்திரத்தை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். எனவே தான் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.