சமீப காலமாக தமிழகத்தை சேர்ந்த இளம் பெண்கள் பலர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நடிக்க வந்தவர் தான், ரம்யா பாண்டியன்.
சிறு வயதில் இருந்தே... சென்னையில் படித்த ரம்யா பாண்டியனுக்கு, தன்னுடைய சித்தப்பா நடிகர் என்பதாலோ என்னவோ, இவருக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து டம்மி டப்பாசு படம் மூலம் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும்... அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. எனவே கவனம் பெறாத நடிகையாகவே இருந்தார் ரம்யா.
பின்னர் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திர கனிக்கு ஜோடியாக இவர் நடித்த... ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தார். இந்த படம் சரியாக ஓடாததால் மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன். திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.