நடிகை நயன்தாரா மலையாள நடிகையாக இருந்தாலும், இவரின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தமிழ் சினிமா தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்கிற பழமொழிக்கு ஏற்ப, இவருக்கு முதல் படமான 'ஐயா' சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'சந்திரமுகி' படத்தில் ஜோடி சேர்ந்தார்.
சிம்புவுடன் காதல், லிப் லாக் சர்ச்சை... மற்றும் நடன இயக்குனரும் , நடிகருமான பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும், அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை, மத மாற்றம் வரை சென்று.. திருமணத்திற்கு முன்பே திடீர் என பிரேக் அப் செய்து பிரிந்தார்.
சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அறிமுகமான 'ஜவான்' திரைப்படம் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதே போல் திரைப்படங்களில் நடிக்க கடந்த ஆண்டு வரை 5 கோடி வாங்கி வந்த இவர் தற்போது அதிரடியாக 10 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். மேலும் தன்னை தேடி வரும் விளம்பர வாய்ப்புகளுக்கும் no சொல்லாத நயன் 5 கோடி சம்பளம் வேண்டும் என கறாராக கேட்கிறாராம்.