பாலிவுட் ஜாம்பவான்களுடன் கைகோர்த்த நடிகர் சூர்யா.. ஏன் இந்த திடீர் சந்திப்பு தெரியுமா? வெளியான ருசிகர தகவல்!

First Published Jan 14, 2024, 4:21 PM IST

Suriya with Amitabh Bachchan : நடிகர் சூர்யா, பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானின் மகள், ஈரா கானின் திருமண வரவேற்பு நிகழ்வில் நேற்று பங்கேற்றார். கருப்பு உடை அணிந்து மாஸ் என்ட்ரி கொடுத்த அவருடைய வீடியோஸ் இணையத்தில் வைரலானது.

Suriya with Akshay Kumar

நேற்று ஆமிர் கானின் மகள் ஈரா கானின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, அந்த ஒரு நிகழ்வில் மட்டும் பங்கேற்கத் தான் மும்பை சென்றதாக அவருடைய ரசிகர்கள் கருதி வந்த நிலையில் அவர்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார் சூர்யா. இன்று நடிகர் சூர்யா மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ஹிந்தி திரையுலகின் சாயின்ஷாவாக திகழ்ந்துவரும் அமிதாப் பச்சன் ஆகிய இருவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Pongal 2024 Gallery: நடிகை ரோஜா முதல்.. பொதுமக்கள் அனைவரும் குதூகலமாக கொண்டாடிய போகி பண்டிகை! போட்டோஸ்!

amitabh bachchan

இதனையடுத்து இந்த மூவரும் எதற்காக ஒன்று கூடினார்கள்? அவர்கள் எந்த விஷயத்தை குறித்து பேசினார்கள்? என்பது தான் இப்பொழுது இணையத்தில் பலரும் தேடி வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் விரைவில் இந்தியாவில் தொடங்க உள்ள "இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்" (Indian Street Premier League) எனப்படும் ISPL நிகழ்ச்சியின் முன்னோட்டத்திற்காக இவர்கள் மூவரும் ஒன்றிணைந்துள்ளனர் என்கின்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

Actor Suriya in Mumbai

ISPL என்பது இந்தியாவில் முதல்முறையாக டென்னிஸ் பந்தை கொண்டு நடத்தப்படும் கிரிக்கெட் டோர்னமெண்ட் ஆகும். இது அரங்கத்திற்குள் விளையாடப்படும் நிகழ்வாக இருக்கும் என்றும், இதனுடைய துவக்கு விழா வருகின்ற மார்ச் 2 முதல் 9ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்காக ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கவே நடிகர் சூர்யா, அமிதா பச்சன் மற்றும் அக்ஷய்குமார் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி உள்ளனர்.

Mirnaa: ஜாக்கெட்டில் ஒற்றை கொக்கி போட்டு.! தாவணியில் தாராள கவர்ச்சி காட்டும் ரஜினியின் ரீல் மருமகள் மிர்ணா!

click me!