ஜெமினி படத்தில் மனீஷா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த கிரண், அதன்பின் கமலுக்கு ஜோடியாக அன்பே சிவம் படத்தில் நடித்திருந்தார். பின்னர் சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார் கிரண்.
இவர் கடைசியாக தமிழில் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்தார். அதன்பின் இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினார் கிரண். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால் தற்போது அதையே தொழிலாக மாற்றிவிட்டார்.
இதையும் படியுங்கள்... சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !
அதன்படி புதிதாக ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை தொடங்கிய கிரண். அதில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதற்கு, தன்னுடன் வீடியோ காலில் பேசுவதற்கு, தன்னை நேரில் சந்திப்பதற்கு என ஒவ்வொன்றுக்கு தனித்தனியாக காசு செலுத்த வேண்டும் என நிர்ணயம் செய்திருந்தார். அதன்படி அவரின் கவர்ச்சி புகைப்படங்களை பெற ரூ.2 ஆயிரமும், அவருடன் வீடியோ காலில் 25 நிமிடம் பேச ரூ.30 ஆயிரமும், நேரில் சந்திக்க ஆசைப்பட்டால் ரூ.1.5 லட்சமும் வசூலிக்கப்படும் என அந்த ஆப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்... எழில் கொஞ்சும் அழகுடன்... பொன்னியின் செல்வனில் இளவரசி குந்தவையாக மிளிரும் திரிஷா - வைரலாகும் போஸ்டர்
இதன்மூலம் நடிகை கிரண் பல பித்தலாட்ட வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவருடன் ஆடியோ காலில் பேச ஒருவர் ரூ.5 ஆயிரம் செலுத்தினாராம். சிறிது நேரம் கழித்து அழைப்பு வந்ததும், அதை எடுத்து ஹலோ என்று சொன்னதும் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாம். இவ்வாறு ஏராளமானோரை கிரண் ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது. கிரணின் இந்த செயலியை முடக்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் எதிப்பு குரல்களை எழுப்பி வருகின்றனர்.