நமது பழைய வாழ்க்கை முறை என்பது திரும்பாமலே கூட போகலாம் என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

நமது பழைய வாழ்க்கை முறை என்பது திரும்பாமலே கூட போகலாம் என உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து கொண்டே உள்ளது. கொரோனா தொற்றால் கோடிகணக்கான மக்கள் உலக அளவில் பாதிக்கபட்டுள்ளனர். கொரோனா தொற்றால் லட்சகணக்கான இறந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து பேசிய உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் கொரோனா தொற்றால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதிலே தெரிகிறது கொரோனா தொற்றுக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை என்று என கூறினார்.

உலக நாடுகள் இந்த விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். கொரோனா தொற்று கூடிக் கொண்டே போனால் நாம் நம்முடைய பழைய வாழ்க்கை முறைக்கு திரும்புவது இயலாத ஒன்றாக மாறிவிடும்’’ என அவர் தெரிவித்தார்.