Asianet News TamilAsianet News Tamil

ஒருவர் குற்றம் செய்தால் 3 தலைமுறையினருக்கு தண்டனை.. மிரள வைக்கும் கொடூர சட்டங்கள்.. எந்த நாட்டில் தெரியுமா?

மிகவும் கடுமையான விதிகள் மற்றும் நூதன நடைமுறைகள் கொண்ட ஒரு நாடு உள்ளது. இந்த நாட்டில் ஒருவர் குற்றம் செய்தால் அதன் பின்விளைவுகளை அவர்களது மூன்று தலைமுறைகள் சந்திக்க நேரிடும்

Weird Rules and Strict Laws in Northkorea under Kim Jong un dictaorship Rya
Author
First Published Oct 28, 2023, 4:05 PM IST

உலகம் முழுவதும் குற்றம் செய்வது சட்டவிரோதமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும் குற்றங்களில் சட்டத்தின் படி தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனை என்பது அந்த குற்றத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு குற்றத்திற்கும் வெவ்வேறு அளவிலான தண்டனைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. சில நாடுகளில் ஜீன்ஸ் அணிவதைத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் சில நாடுகளில் புறாவுக்கு உணவளிப்பது கூட சட்டவிரோதமானது என்று கருதப்படுகிறது.

இந்த விசித்திரமான மற்றும் தனித்துவமான விதிகள் இந்த நாடுகளில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உதவுகின்றன. அந்த வகையில் மிகவும் கடுமையான விதிகள் மற்றும் நூதன நடைமுறைகள் கொண்ட ஒரு நாடு உள்ளது. இந்த நாட்டில் ஒருவர் குற்றம் செய்தால் அதன் பின்விளைவுகளை அவர்களது மூன்று தலைமுறைகள் சந்திக்க நேரிடும் என்பது பலருக்கும் தெரியாது. இந்த கடுமையான சட்டங்களை கொண்டுள்ள நாடு வடகொரியா.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வட கொரியா ஆசியாவில் சர்வாதிகார நாடு என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அங்கு கிம் ஜாங் உங் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற்றது. உலகின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சில விசித்திரமான விதிகளைக் வடகொரியா கொண்டுள்ளது. வடகொரியாவில் ஒருவர் குற்றம் செய்தால், அந்த நபர் மட்டுமின்றி, அவரது பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகளும் கூட சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று வடகொரியாவில் சட்டம் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அழைப்புக்கு தடை

உலகின் மிகவும் அடக்குமுறை நாடுகளில் ஒன்றாக கருதப்படும் வடகொரியாவில், தங்கள் நாட்டின் மக்களுக்கு, அடிப்படை சுதந்திரங்களை மறுத்து கடுமையான விதிகளை அமல்படுத்துகிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு துறையும், பொருளாதாரம் முதல் அரசியல் அமைப்பு வரை அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. வட கொரியாவில், சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வது (International calls) அல்லது வெளிநாட்டினரை தொடர்பு கொள்வது கூட சட்டவிரோதமானது. 

நீல ஜீன்ஸ் அணிய முடியாது

நீங்கள் ஜீன்ஸ் வாங்க முடியும் என்றால், நீங்கள் அவற்றை அணியலாம், ஆனால் அவை கருப்பு நிறமாக இருக்க வேண்டும்; நீல ஜீன்ஸ் ஏகாதிபத்தியத்தை பிரதிநிதித்துவம் செய்வதால் அது வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இசை மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியாது

வட கொரியாவில் வெளிநாட்டு இசை மற்றும் திரைப்படங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த இரண்டும் சட்டவிரோத செயல்களாகவே பார்க்கப்படுகின்றன. வடகொரியாவை சேர்ந்த ஒரு நபர் வெளிநாட்டு இசையை கேட்டாலோ அல்லது வெளிநாட்டு படம் பார்த்தாலோ அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.

Wi-Fi அணுகல் இல்லை

Wi-Fi இல்லை. நீங்கள் ஒரு மொபைல் சாதனத்தில் Wi-Fi  வசதியை பார்க்க முடியாது. வட கொரியாவுக்காக தயாரிக்கப்பட்ட சீன டேப்லெட்களில் Wi-Fi மற்றும் Bluetooth வசதி சேர்க்கப்படவில்லை.

சீனப் பெண் செய்த தவறு.. சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரத் தடை - ஏன்? வெளிநாட்டு ஊழியர்களே கவனம் தேவை!

தற்கொலைக்கு தடை 

வடகொரியாவில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் ஒரு குடும்பம் ஒட்டுமொத்தமாக தண்டிக்கப்படலாம். யாரேனும் குற்றம் செய்தால், அவர்களின் முழு குடும்பமும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

பைபிளுக்கு தடை 

பைபிள் தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அது தனிநபர்களை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

தனித்துவமான காலண்டர்

வட கொரியாவில் ஜூச்சே காலண்டர் பயன்படுத்தப்படுகிறது. இது அவர்களின் நேசத்துக்குரிய புரட்சியாளர் கிம் II சுங்கின் பிறந்த தேதியுடன் தொடங்குகிறது, அதாவது ஏப்ரல் 15, 1912. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் காலண்டர்கள் அங்கு கிடையாது.

வட கொரிய அதிபர் பேசும் போது தூங்கக்கூடாது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிம் பொதுக்கூட்டம் அல்லது கூட்டங்களில் யாரும் தூங்கக் கூடாது. அவர் கூட்டத்தின்  போது தூங்குவது கிம் ஜாங்-உன் மீதான விசுவாசமின்மையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இந்த குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. .

கிரியேட்டிவ் ஹேர் கட் கிடையாது.

உங்களுக்கு ஹேர்கட் தேவைப்பட்டால், அரசாங்கம் அனுமதித்துள்ள 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். மற்ற அனைத்து சிகை அலங்காரங்களும் வட கொரியாவில் அனுமதிக்கப்படவில்லை, எனவே ஆண்களும் பெண்களும் 28 அனுமதிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஹேர்கட்களில் மட்டுமே ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதிபரை அவமதித்தால் கடும் தண்டனை :

ஒவ்வொரு வட கொரியரும் கிம் ஜாங்-உன், அவரது குடும்பத்தினர் மற்றும் அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் விசுவாசத்துடன், பக்தியுடனும் வாழ வேண்டும். அதாவது கிம் ஜாங் உன் அங்கு கடவுள் போன்றவர். வடகொரிய அரசு, கிம் குடும்பத்தை அவமதிப்பதாகக் கருதப்படும் எந்தச் செயலையும் தேச துரோகமாக கருதி குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். 

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் விமானப்படை தளபதி உயிரிழப்பு; ஜல்லடையான சுரங்கப்பாதைகள்!!

நாட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை

வட கொரிய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் சரியான ஆவணங்கள் இல்லாமல் அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எவரையும் எல்லைக் காவலர்கள் சுடுவதற்கு அதிகாரம் உள்ளது. கிம்மின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து தப்பிக்க அல்லது மறைக்க முயல்பவர்களுக்கு பொதுவாக மரணம்தான் மிகக் கடுமையான தண்டனை. உள்நாட்டு பயணத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குடும்பத்தைப் பார்க்க வேறொரு நகரம் அல்லது குக்கிராமத்திற்குச் செல்ல உங்களுக்கு அனுமதி தேவை.

மின் வெட்டு

நாட்டில் நிலவும் எரிசக்தி பிரச்சனைகள் காரணமாக, வடகொரியர்கள் தொடர்ந்து மின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். கூடுதலாக, மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி தேவைப்படுகிறது, மேலும் மைக்ரோவேவ் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

கட்டாய இராணுவ சேவைகள்

வடகொரியாவின் அனைத்து குடிமக்களுக்கும் ராணுவத்தில் சேர வேண்டும். ஆண்கள் 10 ஆண்டுகள், பெண்கள் 7 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். வட கொரியாவின் அணு ஆயுத மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மிகவும் அடக்குமுறை ஆட்சியால் ஒரு நிலையற்ற பாதுகாப்பு சூழ்நிலை இருப்பதால் வட கொரியாவில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios