Singapore News : இந்தியாவை போலவே சிங்கப்பூரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது, இன மற்றும் மொழி பாகுபாடு இன்றி சிங்கப்பூரில் உள்ள மக்கள் அனைவரும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர். 

இந்த சூழலில் தீபாவளிக்கு கூட சொந்தங்களோடு தனது நேரத்தை செலவிடாமல், மக்களுக்காக களமிறங்கி பணி செய்த சிங்கப்பூர் போலீஸ் சார்ஜென்ட் நிவேதா விஜயகுமார் பற்றிய ஒரு பதிவை பகிர்ந்துகொண்டுள்ளது சிங்கப்பூர் போலீஸ் துறை. அவர்கள் வெளியிட்ட பல தகவல்கள் பின்வருமாறு.. "இந்த தீபாவளிக்கு குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஓய்வு எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தும், சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர், அதற்குப் பதிலாக களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்". 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரோச்சர் நெய்பர்ஹூட் போலீஸ் சென்டரின் (NPC) அதிகாரியான சார்ஜென்ட் நிவேதா விஜயகுமார், இந்த தீபாவளி பண்டிகை வார இறுதியில் லிட்டில் இந்தியாவில் ரோந்து செல்ல முன்வந்தது ஏன் என்பதை SPF வெளியிட்ட பேட்டியில் விளக்கியுள்ளார். "எனது குழு எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது, விடுப்பு எடுப்பது பற்றி பரிசீலிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எனது தமிழ் மொழி திறன், லிட்டில் இந்தியா பகுதிக்கு வரும் பல தமிழர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணினேன்" ஆகவே விடுப்பு எடுக்காமல் பணி செய்ய முன்வந்தேன் என்று நிவேதா கூறியுள்ளார்.

சிக்கலுக்கு மேல் சிக்கல்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. வழக்கறிஞர் ரவிக்கு சிறை - சிங்கப்பூர் கோர்ட் அதிரடி! 

சார்ஜெண்ட் அதிகாரியாக இது தனது முதல் ஆண்டு என்பதால், இந்த தீபாவளி தனித்துவமானது என்று அவர் மேலும் கூறினார். மேலும் தனது குடும்பத்தினரின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் அவர் கூறினார். "எனது குடும்பம் எனது பொறுப்புகளைப் புரிந்துகொள்கிறது மற்றும் அதிகாரிகளுக்கு, கடமை என்பது ஒருபோதும் ஓய்வு எடுக்காது என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

"உறவினர்களை சென்று பார்ப்பதற்குப் பதிலாக, நான் எனது குழுவோடு, எனது பெரிய குடும்பத்துடன் இருப்பேன், அவர்கள் கொண்டாடும் போது அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பேன். நாள் முடிவில், என் இதயம் நிறைந்திருக்கிறது, தாமதமான கொண்டாட்டத்திற்காக என் குடும்பத்திற்குத் திரும்பிச் செல்வேன். என் கடமையை நிறைவேற்றினேன் என்ற சந்தோஷத்தோடு" என்றார் அவர். 

நிவேதா தனது கடமையின் ஒரு பகுதியாக, சாலைகள் மற்றும் பாதசாரிகள் நடைபாதைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அதே போல் திருவிழாக்கள் காரணமாக தங்கள் சுற்றுப்புறத்தைப் பற்றி குறைவாகவே அறிந்திருக்கும் தெருக்களில் உல்லாசப் பயணிகள் மற்றும் மக்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் தீபாவளி.. சித்தார் வாசித்துக்கொண்டே வாழ்த்து சொன்ன துணை பிரதமர்.. உதவிய தமிழர் - வைரலாகும் Video

கடந்த பிப்ரவரி 2023ல் ரோச்சர் என்பிசியில் சேருவதற்கு முன்பு, அவர் தனது ஆறு மாத அடிப்படை போலீஸ் அதிகாரி படிப்பையும், சோவா சூ காங் என்பிசியில் தரைப் பதில் படை (ஜிஆர்எஃப்) அதிகாரியாக இணைவதையும் முடித்தார். சிங்கப்பூர் அதிபர் சண்முகரத்தினம் துவங்கிய சிங்கப்பூரில் பல்வேறு உயர் பதவிகளில் தமிழர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.