உக்ரைன் போர் மற்றும் உள்நாட்டு கலகம் குறித்து பிரதமர் மோடி, ரஷ்யாவின் அதிபர் புடின் உடன் தொலைபேசியில் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் வெள்ளிக்கிழமை தொலைபேசி அழைப்பில் உக்ரைனைச் சுற்றியுள்ள நிலைமை மற்றும் ஆயுதமேந்திய கூலிப்படை கலகத்தை மாஸ்கோ எவ்வாறு தீர்த்தது என்று விவாதித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சனிக்கிழமை வாக்னர் கூலிப்படை குழுவின் கலகத்தை கையாள்வதில் ரஷ்ய தலைமையின் தீர்க்கமான நடவடிக்கைகள் என்று கிரெம்ளின் கூறியதற்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்ததாக கிரெம்ளின் கூறியது.

"ரஷ்யாவில் ஜூன் 24 அன்று நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரஷ்ய தலைமையின் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு நரேந்திர மோடி புரிந்துணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தினார்" என்று கூறியது.

இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்ததாகவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் மோடியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இனிதான் ஆரம்பமே..! தமிழகத்தில் இந்த இடங்களில் 5 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை - முழு விபரம்

ரஷ்யாவின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் புடின் தெரிவித்தார். "உக்ரைன் நிலைமை பற்றி விவாதிக்கும் போது, பிரதமர் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்," என்று கூறியது. ரஷ்யா உக்ரைனுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக மோதலில் ஈடுபட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் G20 ஆகியவற்றில் தங்கள் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஜி20 நாடுகளுக்குள்ளும், இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பிற்குள்ளும் ஒத்துழைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருடன் யாரா இருக்கும்.? 50 லட்சத்துக்கும் அதிகமான கொள்ளை பொருட்களை கண்டுபிடித்த ஆப்பிள் ஏர்டேக்! அடேங்கப்பா