பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், குழந்தைகள் உட்படப் பலரும் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜௌர் மாவட்டத்தில், சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், குழந்தைகள் உட்படப் பலரும் காயமடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பஜௌர் மாவட்ட காவல்துறை அதிகாரி வகாஸ் ரஃபீக், கார் தஹ்சில் பகுதியில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்ததை உறுதிப்படுத்தினார். இது IED வெடிகுண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்று அவர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உட்படப் பலர் காயமடைந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Scroll to load tweet…

தொடரும் தாக்குதல்கள்

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள், பொதுக்கூட்டங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது தொடர் கதையாக உள்ளது. கடந்த காலங்களில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற பயங்கரவாதக் குழுக்கள் இத்தகைய தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளன. இந்தத் தாக்குதல், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள், பொதுக்கூட்டங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது தொடர் கதையாக உள்ளது. கடந்த காலங்களில் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற பயங்கரவாதக் குழுக்கள் இத்தகைய தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளன.