Asianet News TamilAsianet News Tamil

ராஜபக்சே பிரதமர் ஆக முடியாது … நானே பிரதமர்…. கொக்கரிக்கும் ரணில் விக்கிரமசிங்கே !!

இலங்கையில் அதிபர் மைத்திரி பாலசிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தும் ரணிலை பதவி நீக்கம் செய்தும் மைத்திரி உத்தரவிட்டுள்ளார். ஆனால் என்னை பதவியில் இருந்து நீக்க மைத்திரிக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய ரணில் தானே பிரதமர் என அறிவித்துள்ளார்.

I am the prime minister ranil vikramasinge
Author
Sri Lanka, First Published Oct 26, 2018, 10:07 PM IST

இலங்கையின் பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி வகித்து வந்தார்.தற்போது அவர் அப்பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.அதிபர் சிறிசேன கட்சியும் இலங்கை அரசியலில் இருந்து விலகியது.

இதையடுத்து இலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டுள்ளார். இலங்கை ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

I am the prime minister ranil vikramasinge

இதையடுத்து  இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன முன்னிலையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய நிலையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

I am the prime minister ranil vikramasinge

இது குறித்து  பாஜக எம்.பி. சுப்ரமணியன்  சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது நண்பர் ராஜபக்சே இலங்கை பிரதமர் ஆகபதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

I am the prime minister ranil vikramasinge

இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்க அதிபர் மைத்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தானே பிரதமராக தொடரப் போவதாகவும் ரணில் விக்கிரசிங்கே அறிவித்துள்ளார்.

I am the prime minister ranil vikramasinge

இதையடுத்த இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் தனத்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios