காண்போரை கண்கலங்க வைத்த நாயின் விசுவாசம்!
பெரு நாட்டில் விபத்துக்குள்ளான எஜமானனுக்கு உதவியாக அவசர சிகிச்சை பிரிவில் அமர்ந்திருந்த நாய்களின் உருக்கமான காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
பெருவில் உள்ள Chimbote என்னுமிடத்தில் விபத்தில் கீழேவிழுந்து தலையில் அடிபட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவரை, அவரது செல்ல நாய்கள் இரண்டும் பிரிய மனமில்லால் அவர் கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்ஸ்சில் ஏறி தலைக்கு மேல் அமர்ந்திருந்திருந்தது.
மேலும் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லும் வரை அவரை சுற்றி சுற்றி வந்தன. இந்த உருக்கமான காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த காட்சி மனிதரை விடவும் உயிரினங்களின் அன்பு மிகவும் பெரிது என்ற உண்மையை எடுத்துரைப்பதாக அமைந்தது.