முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் முழு தேர்தல் அட்டவணையையும் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகு, வங்காளதேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) நசிருதீன் வெளியிட்டார். சுதந்திரமான ஜனநாயக முறையில் வாக்கெடுப்பை நடத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க நாடு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிப். 12-ல் வாக்குப்பதிவு

மக்கள் போலியான செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அவர் வலியுறுத்தினார். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் ஜூலை சாசன (July Charter) வாக்குப்பதிவு ஆகிய இரண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதிப்படுத்தினார்.

மொத்தம் 300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. வெளிநாட்டில் வாழும் வங்கதேச மக்கள் (Non-resident Bangladeshis) நாளை முதல் டிசம்பர் 25 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசப் பொதுத்தேர்தல் தேர்தல் அட்டவணை

தேர்தல் ஆணையத்தின்படி, இந்தத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகள் பின்வருமாறு:

வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள்: டிசம்பர் 29, 2025 (திங்கட்கிழமை).

வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி 4, 2026 (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும்.

மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள்: ஜனவரி 20, 2026 (செவ்வாய்க்கிழமை).

மேலும், தேர்தல் அதிகாரிகளின் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஜனவரி 11, 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடுகளை ஜனவரி 12 முதல் ஜனவரி 18, 2026 வரை தேர்தல் ஆணையம் முடித்து வைக்கும்.

தேர்தல் செயல்முறைகள் முழுவதும் வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசிருதீன் வலியுறுத்தினார்.