பலுசிஸ்தான் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 52ஆக உயர்ந்தது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானிலுள்ள ஷா நூரானி எனப்படும் வழிப்பாட்டு தளம் அருகே கடந்த 12ம் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் பரிதாபமாக இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்முக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் இன்று அதிகாலையில் இறந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 52 ஆக உயந்தது.
பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
