Asianet News TamilAsianet News Tamil

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் பலியான துயர சம்பவம்

துபாயில் நடந்த கட்டிட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 Indians among 16 dead in Dubai building fire
Author
First Published Apr 16, 2023, 1:39 PM IST

துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 16 பேரில் கேரளாவை சேர்ந்த ஒரு தம்பதி உட்பட குறைந்தது நான்கு இந்தியர்களும் அடங்குவார்கள்.

துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒன்பது பேர் காயமடைந்து உயிரிழந்த 16 பேரில் கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி உட்பட குறைந்தது நான்கு இந்தியர்களும் அடங்குவர் என்று செய்தி வெளியாகி உள்ளது. நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 15) மதியம் 12:35 மணியளவில் துபாயின் அல் ராஸில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக துபாய் குடிமைத் தற்காப்பு நடவடிக்கை அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது என்றும், இந்த தீயை அணைக்க போர்ட் சயீத் தீயணைப்பு நிலையம் மற்றும் ஹம்ரியா தீயணைப்பு நிலையத்தின் குழுக்களும் வரவழைக்கப்பட்டன. உள்ளூர் நேரப்படி மதியம் 2:42 மணிக்கு தீ அணைக்கப்பட்டது.  

இதையும் படிங்க..பாஜகவில் இருந்து விலகும் ஜெகதீஷ் ஷெட்டர்.. தூண்டில் போட்ட காங்கிரஸ் - கர்நாடக பாஜகவில் உச்சகட்ட குழப்பம்

4 Indians among 16 dead in Dubai building fire

இதுவரை, கட்டிடத்தில் பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு ஜோடி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், 3 பாகிஸ்தானிய உறவினர்கள் மற்றும் ஒரு நைஜீரியப் பெண் உட்பட 4 இந்தியர்களை அடையாளம் காண முடிந்தது" என்று துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது. துபாய் காவல்துறை, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம், பிற தூதரக அதிகாரிகள் மற்றும் இறந்தவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அவர் ஒருங்கிணைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்

4 Indians among 16 dead in Dubai building fire

முதற்கட்ட விசாரணையில் கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு தேவைகள் இல்லை என துபாய் குடிமைத் தற்காப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான அறிக்கையை வழங்க அதிகாரிகள் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். துபாயில் நடந்த தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி

Follow Us:
Download App:
  • android
  • ios